வரவேற்போம் வாங்க!.......
நம்ம தாளவாடியில் தானியங்கி (ஆட்டோ) போக்குவரத்து பயணிகளுக்காக புதிய இயக்கம்.
மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.அரசு அனுமதி பெற்று 2015ஆகஸ்டு இந்த மாதம் முதல் ஈரோடு மாவட்டம் தாளவாடியில் பொதுமக்கள் போக்குவரத்து வசதிக்காக ஆட்டோ போக்குவரத்து துவக்கப்பட்டுள்ளது.இதுவரை மலைப்பகுதியான தாளவாடியில் ஆட்டோ இயக்க அனுமதி இல்லாமல் இருந்தது.தற்போது பத்து புதிய ஆட்டோக்கள் வருகை தந்துள்ள நிலையில் இன்னும் கூடுதலாக ஐந்து ஆட்டோக்கள் வர உள்ளதாம். தாளவாடி மக்களுக்காக இனிதே வரவேற்கிறேன்.
பகிரப்பட்டுள்ள படம், தாளவாடி பண்ணாரி மாரியம்மன் கோவிலில் பூஜை செய்த போது எடுத்த படம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக